சிவகங்கை அருகே - பஸ் மோதி இருவர் உயிரிழப்பு : மருதுபாண்டியர் அஞ்சலிக்கு சென்றவர்கள்

முருகானந்தம், அரவிந்த் பாரதி
முருகானந்தம், அரவிந்த் பாரதி
Updated on
1 min read

சிவகங்கை அருகே மருது பாண்டியர்களுக்கு அஞ்சலி செலுத்த மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் சென்ற இருவர் அரசு பஸ் மோதி இறந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில், அவர் களது நினைவு தினம் நேற்று நடந்தது.

இதையடுத்து அஞ்சலி செலுத்த திருப்புவனம் அருகே ஆவரங்காடைச் சேர்ந்த அரவிந்த் பாரதி(18), வானக்கருப்பைச் சேர்ந்த முருகானந்தம்(19), தூதை வேளாங்குளத்தைச் சேர்ந்த ராஜேஷ் (19) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஒக்கூர் பத்து கண் பாலம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் மீது திருச்சியில் இருந்து சிவகங்கை நோக்கி வந்த அரசு பேருந்து மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அரவிந்த் பாரதி, முருகானந்தம் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ராஜேஷ் சிவ கங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

விபத்து குறித்து மதகுபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in