விபத்தில் தம்பதி உயிரிழப்பு :

விபத்தில் தம்பதி உயிரிழப்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள முத்துவாஞ்சேரியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ்(35). மளிகைக் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுபலட்சுமி(26). இருவரும் கடந்த 22-ம் தேதி அரியலூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். முத்துவாஞ்சேரி அருகே வந்தபோது, சாலையின் நடுவில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் காயமடைந்த சுபலட்சுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். மோகன்தாஸ் தஞ்சாவூர் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். விக்கிரமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in