வேலூர் முத்துரங்கம் கல்லூரி : என்சிசி மாணவிக்கு பாராட்டு :

வேலூர் முத்துரங்கம் கல்லூரி : என்சிசி மாணவிக்கு பாராட்டு :
Updated on
1 min read

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற முத்துரங்கம் அரசினர் கல்லூரி என்சிசி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வேலூர் முத்துரங்கம் அரசினர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிதம் படிக்கும் மாணவி சோபிதா, புதுச்சேரியில் நடைபெற்ற என்சிசி மாணவர்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்றார். கடந்த மாதம் நடைபெற்ற இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார்.

இதனை தொடர்ந்து, மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக என்சிசி அணியின் சார்பில் பங்கேற்று திரும்பியுள்ளார்.

பதக்க வாய்ப்பை இழந்தாலும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று திரும்பிய மாணவி சோபிதாவை, கல்லூரி முதல்வர் மலர் மற்றும் என்சிசி அலுவலர்கள், பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in