சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு :

சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தில் வசித்தவர் திருமால்(28). தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து ஆரணிக்கு இரு சக்கர வாகனத்தில் நேற்று முன் தினம் சென்றுள்ளார்.

களம்பூர் சாலையில் சென்ற போது, தனக்கு முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது திருமால் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த திருமால் உயிரிழந்தார். இது குறித்து களம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in