தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 படித்தவர்கள் தொழில் தொடங்க ரூ.75 லட்சம் மானியம் :

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 படித்தவர்கள்  தொழில் தொடங்க ரூ.75 லட்சம் மானியம் :
Updated on
1 min read

தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் வெளியிட்ட அறிக்கை: புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மாவட்ட தொழில் மையத்தால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சேர பட்ட தாரியாக இருக்க வேண்டும் என்ற கல்வித் தகுதி, தற்போது பிளஸ் 2 வரை படித்திருந்தால் போதும் என மாற்றப்பட்டுள்ளது. முதலீட்டு மானியத் தொகையும் ரூ.50 லட்சத்திலி ருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வயது 21. ஆர்வம் உள்ளவர்கள் மாவட்டத் தொழில் மையத் தை நேரிலோ அல்லது 8925533998 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in