செந்துறை அருகே - விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு :

செந்துறை அருகே -  விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த குழுமூர் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகேசன் மகன் தினேஷ்(20), சுப்பராயன் மகன் ஆறுமுகம்(20). கல்லூரி மாணவர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு குழுமூரிலிருந்து அங்கனூரில் உள்ள தினேஷின் தாத்தா வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

வங்காரம் அருகே சென்றபோது, வயலிலிருந்து டிராக்டர் ஒன்று சாலையில் ஏறியுள்ளது. அப்போது, டிராக்டர் மீது தினேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து இருவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், தினேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து செந்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in