நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு :

நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள அணைக்கரை வடவார் ஆற்றில் கஞ்சங்கொல்லை அருகே அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக மீன்சுருட்டி போலீஸாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, இறந்தவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல, ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் தெற்கு முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சங்கர்(85). இவர் நேற்று காலை அங்குள்ள குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in