திருடுபோன செல்போன்கள் ஒப்படைப்பு :

திருடுபோன செல்போன்கள் ஒப்படைப்பு :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைதுரை மேற்பார்வையில் தி.மலை மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பாரதி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில், மாவட்டத்தில் காணாமல் போனதாக புகார் பெறப்பட்ட 100 பேரின் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், முதற்கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்களை, உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் நேற்று ஒப்படைத்தார். அப்போது, காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in