குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது :

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலை ஆனந்தபுரத்தில் ஷபிமுகமது (37) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 28-ம் தேதி அப்பகுதியில் வசித்து வந்த தொழிலதிபர் வீட்டில் புகுந்து, ஷபிமுகமது திருட்டில் ஈடுபட்டுள்ளார். திருட்டை தடுக்க வந்த தொழிலதிபரை, கத்தியால் குத்தியுள்ளார். புகாரின்பேரில் ஷபிமுகமதுவை, குன்னத்தூர் போலீஸார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது, சென்னையில் கொலை வழக்குகள் இருந்ததால், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கான ஆணை நகலை சிறையில் உள்ள ஷபிமுகமதுவிடம் போலீஸார் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in