திருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை :

திருமணம் செய்வதாக இளம்பெண்ணை  ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்வதாக இளம் பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல்காந்தி(25). இவர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு நெருக்கமாக பழகியுள்ளார். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள ராகுல்காந்தி மறுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் ராகுல்காந்தியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் அந்தப் பெண்ணை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் கள்ளக்குறிச்சிஅனைத்து மகளிர் போலீஸார் ராகுல்காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் நீதிபதி சாந்தி இவ்வழக்கில் ராகுல்காந்திக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ 25 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.

மேலும் மற்ற 3 பேரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in