மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு :

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு :
Updated on
1 min read

சிறப்பாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவைபுரிந்தவர்கள், நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி மற்றும் கல்வி போதனை செய்தமைக்கான சிறந்த ஆசிரியர், பயிற்சி மற்றும் கல்வி போதனை செய்தமைக்கான சிறந்த ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர், சிறந்த சமூகப் பணியாளர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனம், மாற்றுத்திறனாளிகளில் சிறப்பாக பணி புரிந்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் பயிற்சி அளித்த நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கு தகுதியானவர்கள் ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, வரும் 26-ம் தேதிக்குள் வழங்க வேண்டும், என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in