‘சசிகலாவால் அதிமுகவில் குழப்பம் அதிகரிக்கும்' :

‘சசிகலாவால் அதிமுகவில்  குழப்பம் அதிகரிக்கும்' :
Updated on
1 min read

சசிகலா வருகையால் அதிமுகவில் குழப்பம் அதிகரிக்கும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சசிகலா வருகையால் அதிமுகவில் கோஷ்டிப் பூசல் உருவாகி குழப்பம் அதிகரிக்கும். அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் நல்லது. இந்துக்களிடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்து ஆபத்தானது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in