தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம் :

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம் :
Updated on
1 min read

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில துணைத் தலைவர் எழில் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரங்கராஜன், முன்னாள் மாநிலத் தலைவர் சுதாகரன், முன்னாள் பொருளாளர் பெர்னபாஸ், மாவட்டச் செயலாளர்கள் ராஜேந்திரன்(பெரம்பலூர்), லட்சுமி நாராயணன்(நாகை), ஈவேரா(திருவாரூர்), குமார்(விழுப்புரம்) மற்றும் மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் 54 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், புதிய மாநிலத் தலைவராக லட்சுமி நாராயணன், பொருளாளராக குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்துக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் ரங்கராஜன் கூறியபோது, “தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பள்ளி திறப்பதற்குள் இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in