நாய் கடித்து சிறுமி படுகாயம் :

நாய் கடித்து சிறுமி படுகாயம் :
Updated on
1 min read

திருச்சி பெரிய சவுராஷ்டிரா தெருவைச் சேர்ந்த பாண்டி மகள் சிவன்யா(3). நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு முன் நின்று கொண்டிருந்த இச் சிறுமியை அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் விரட்டி விரட்டிக் கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருச்சி மாநகரில் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in