கூட்டுறவு சங்கத்தில் ரூ.18 லட்சம் மோசடி : சங்கத் தலைவர் கைது

கூட்டுறவு சங்கத்தில் ரூ.18 லட்சம் மோசடி :  சங்கத் தலைவர் கைது
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஆனந்தூர் அருகேயுள்ளது சேர்ந்தமங்களம். இங்கு திருத்தேர்வளை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

சங்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2020-ம் ஆண்டு ஜூலை வரை கடன் வசூல் பணம், கடன் வழங்கியதாகப் பொய் கணக்கு எழுதியது உள்ளிட்ட வழிகளில் மொத்தம் ரூ.18,14,818 கையாடல் செய்திருப்பது தணிக்கையில் தெரிய வந்தது. இது தொடர்பாக ராமநாதபுரம் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் கோவிந்தராஜன் ராமநாதபுரம் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் திருத்தேர்வளை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கச் செயலர் ஆ.ஆசைத்தம்பி, தலைவர் ப.தங்கவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சங்கத் தலைவர் ஆயங்குடியைச் சேர்ந்த ப.தங்கவேல் (67) நேற்று கைது செய்யப்பட்டார். செயலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in