திருப்பூரில் 6 வயது சிறுவன் மாயம் :

திருப்பூரில் 6 வயது சிறுவன் மாயம் :
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி முஸ்லீம் மன்சூரி,சாஹோ பீபி. கட்டிடத் தொழிலாளர்கள். இவர்களுக்கு, ஐந்து குழந்தைகள் உள்ளனர். இரண்டு குழந்தைகளை ஊரில் விட்டுவிட்டு, திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில், மற்ற மூன்று குழந்தைகளான தமன்னா (10), சபீனா (8), ஹர்மான் (6) ஆகியோருடன் தம்பதி தங்கியுள்ளனர்.

கடந்த 6-ம் தேதி வழக்கம் போல தம்பதி வேலைக்கு சென்றிருந்தனர். வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஹர்மான் மாயமானார். புகாரின் பேரில், தனிப்படை அமைத்து 15 வேலம் பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in