

உதகை: நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநராக கனகராஜ் பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் கூட்டம் ரகசியமாக நடைபெறுவதாகவும், இக்கூட்டத்தில் தீபாவளி வசூல் நடைபெறுவதாகவும் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷினி, காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி, உதவி ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோர் அங்கு சோதனை நடத்தினர். அதில் கணக்கில் காட்டப்படாத ரூ.80,190 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மற்றும் அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.