தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை :

தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை :
Updated on
1 min read

பூதலூர் வடக்கு ஒன்றிய திருக்காட்டுப்பள்ளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு கூடநாணலில் நேற்று நடைபெற் றது. மாநாட்டுக்கு கலைச்செல்வி தலைமை வகித்தார்.

மாநாட்டை மாவட்டச் செயற் குழு உறுப்பினர் வெ.ஜீவக்குமார் தொடங்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் கே.காந்தி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில், திருக்காட்டுப் பள்ளி புறவழிச் சாலையை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும்.

புதிதாக பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும். திருக்காட்டுப்பள்ளி அரசு மருத் துவமனையில், கட்டு கட்டுபவர், துப்புரவு பணியாளர்களை போதிய அளவு நியமனம் செய்ய வேண்டும்.

பூதலூர் பகுதியில் விவசாயி களுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in