சிவந்திப்பட்டி ஊராட்சியில் தலைவராக - 90 வயது மூதாட்டி தேர்வு :

90 வயது மூதாட்டி பெருமாத்தாள்.படம்: மு.லெட்சுமிஅருண்
90 வயது மூதாட்டி பெருமாத்தாள்.படம்: மு.லெட்சுமிஅருண்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திபட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றுள்ளார்.

இத்தேர்தலில் இவர் 1,558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோர் டெபாசிட் இழந்தனர்.

90 வயதில் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெரு மாத்தாளுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். தனது வெற்றி குறித்து பெருமாத்தாள் கூறும்போது, ‘‘எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிவந்திப்பட்டி ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர பாடுபடுவேன்’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in