தோவாளை மலர் சந்தை களைகட்டியது :

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தை நேற்று களைகட்டியிருந்தது.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தை நேற்று களைகட்டியிருந்தது.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சந்தையான தோவாளை மலர் சந்தையில்கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில்பூக்கள் விற்பனை மந்தமாகவே இருந்தது. ஓணம் பண்டிகையின்போது விற்பனை சிறப்பாக இருந்ததால் மலர் விவசாயிகள், வியாபாரிகள் ஓரளவு வாழ்வாதாரம் பெற்றனர். ஆனால், அதன் பின்னர் மீண்டும் பூக்கள் விற்பனையில் தேக்கம் நிலவியது.

இந்நிலையில், நவராத்திரி பூஜைகளுக்காக கடந்த ஒரு வாரமாக தோவாளை மலர் சந்தையில் ஓரளவு பூக்கள் விற்பனை ஆனது. இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு மதுரை, சத்தியமங்கலம், பெங்களூரு, சேலம் பகுதிகளில் இருந்து வழக்கத்தைவிட 100 டன்களுக்கு மேல் பூக்களை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டத்துக்கு தடை இருந்தாலும், வீடுகளில் பூஜை செய்வதற்காக மக்கள் நேற்று அதிகாலையில் இருந்தே பூக்களை வாங்க குவிந்தனர். இதனால் நேற்று தோவாளை மலர் சந்தை களைகட்டியது. ஒரு கிலோ மல்லிகை ரூ.850-க்கும், பிச்சிப்பூ 1,250-க்கும் விற்பனை ஆனது. கிரேந்தி ரூ.100, வாடாமல்லி ரூ.180-க்கு விற்பனை ஆனது. சரஸ்வதி பூஜைக்கு உகந்த தாமரை பூ ஒன்று ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை ஆனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருநெல்வேலி

தூத்துக்குடி

மேலும், தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வாழைக்கன்றுகள் விற்பனைக்காக மார்க்கெட் பகுதியில் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. ஒரு ஜோடி வாழைக்கன்று ரூ.10 முதல் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல், சிறிய பாக்கெட்டுகளாக அவல், சோளப்பொரி, அரிசிப்பொரி ஆகியவை தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாவிலை, பனைஓலை தோரணங்களும் விற்பனை செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in