விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

நூறு நாள் வேலை திட்டத்தையும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் இழிவுபடுத்தி பேசியதாக, நாம் தமிழர் கட்சி சீமானை கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in