மிலாடி நபியையொட்டி 19-ம் தேதி மதுபானக் கடைகளை மூட உத்தரவு :

மிலாடி நபியையொட்டி 19-ம் தேதி மதுபானக் கடைகளை மூட உத்தரவு :
Updated on
1 min read

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடும்படி, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மிலாடி நபி தினத்தை முன்னிட்டு வரும் 19-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடை, மதுபானக் கூடங்களை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபானக் கூடங்களை மூடி வைக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட நாளில் மதுபான சில்லறை விற்பனை கடைகளை திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in