வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடல் :

வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடல் :
Updated on
1 min read

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித் துறை சாலையோ ரம் குடியிருப்புகளையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வந்தது. இக்கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின், மாவட்டத் தலைவர் சுரேஷ், பகுதிச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் நேற்று அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த திருச்சி கிழக்கு வட்டாட்சியர் சேக் முஜிப், டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். இதையடுத்து, போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in