சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு - திருச்சி மாவட்டத்தில் 59% பேர் பங்கேற்கவில்லை :

திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் நேற்று சிவில் சர்வீஸ் தேர்வு (யுபிஎஸ்சி) எழுத வரிசையில் நின்றவர்கள்.படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் நேற்று சிவில் சர்வீஸ் தேர்வு (யுபிஎஸ்சி) எழுத வரிசையில் நின்றவர்கள்.படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
1 min read

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு நேற்று திருச்சி மாவட்டத்தில் 18 மையங்களில் நடைபெற்றது. இதில், 59 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் நிலைத் தேர்வுக்காக திருச்சி மாவட்டத்தில் 18 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருச்சி மாவட்டத்தில் இந்தத் தேர்வை எழுத 7,390 பேருக்கு தேர்வுகூட அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று நடைபெற்ற பொது அறிவுத் தாள் தேர்வில் 3,021 பேர் (40.87 சதவீதம்) பங்கேற்றனர், 4,369 பேர் (59.12சதவீதம்) பங்கேற்கவில்லை.

அதைத்தொடர்ந்து, பிற்பக லில் நடைபெற்ற திறனறித் தாள் தேர்வில், காலையில் பொது அறிவுத் தேர்வில் பங்கேற்றவர்களில் 24 பேர் கலந்து கொள்ளவில்லை. அதாவது, திறனறித் தேர்வில் 2,997 பேர் (40.55 சதவீதம்) மட்டுமே பங்கேற்றனர், 4,393 பேர் (59.44 சதவீதம்) பங்கேற்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in