சூனாம்பேடு அருகே கிராம மக்கள் மறியல் :

சூனாம்பேடு அருகே கிராம மக்கள் மறியல் :
Updated on
1 min read

மதுராந்தகம் அருகேயுள்ள சூணாம்பேடு ஊராட்சிக்கு உள்

பட்ட வில்லிவாக்கம் கிராமத்தில், 12-வது வார்டில் 850 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 170 பேர் 14-வது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சேபம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் கிராம மக்கள் நேற்று கருப்புக் கொடியுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலந்து வந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மாவட்ட கண்காணிப்பாளர் துரை பாண்டியன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதிஅளித்ததால், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in