நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :

நீரில் மூழ்கி சிறுவன்  உயிரிழப்பு :
Updated on
1 min read

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் நல்லகேணி தெருவைச் சேர்ந்தவர் அமருதீன் மகன் முகமது ஆசிக்(13). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் ரெட்டைமலை அருகிலுள்ள இடைச்சவாரி வடிகால் வாய்க்கால் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கி முகமது ஆசிக் உயிரிழந்தார். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in