உறவினர்கள் விவரம் தெரியாததால் - சேலம் அரசு மருத்துவமனையில் 88 நாட்களாக உள்ள முதியவரின் உடல் :

உறவினர்கள் விவரம் தெரியாததால் -  சேலம் அரசு மருத்துவமனையில் 88 நாட்களாக உள்ள முதியவரின் உடல் :
Updated on
1 min read

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதித்து உயிரிழந்த முதியவரின் உடல் பிரேத கூடத்தில் கடந்த 88 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது. இறந்த முதியவரின் உறவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வேலாயுதம் (72) என்பவர் கடந்த ஜூன் 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூலை 14-ம் தேதி வேலாயுதம் உயிரிழந்தார்.

அவரது உறவினர்கள் யார் என்பது தெரியாத நிலையில், கடந்த 88 நாட்களாக சேலம் அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. வேலாயுதம் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவரது முகவரி தெரியவில்லை.

அவரது உறவினர்கள் குறித்து, சேலம் அரசு மருத்துவமனை போலீஸார் தேடி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால் 0427-2210607, 9498100949 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சேலம் அரசு மருத்துவமனை போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in