சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நாட்ராயன் (70). இவர் கடந்தாண்டு செப்.30-ம் தேதி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் நாட்ராயனை கைது செய்தனர்.

கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நீதிபதி நேற்று அளித்த தீர்ப்பில், நாட்ராயனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும், அதை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in