தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு சர்வேயர் சஸ்பெண்ட் :

தேனி மாவட்டத்தில்  மேலும் ஒரு சர்வேயர் சஸ்பெண்ட் :
Updated on
1 min read

தேனி அருகே வடவீரநாக்கன் பட்டி, தாமரைக்குளம் பகுதி அரசு நிலங்களை பட்டாவாக மாற்றி மோசடி செய்ததாக 2 வட்டாட்சியர்கள், 2 துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தேவதானப் பட்டியைச் சேர்ந்த சர்வேயர் பிச்சைமணி நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது குறித்து ஆட்சியர் க.வீ.முரளிதரன் கூறுகையில், தனியார் பெயரில் மாற்றப்பட்ட நிலங்கள் மீண்டும் அரசு நிலங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இடத்தை வாங்கிய 69 பேர் மீது விசாரணை நடக்கிறது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.90 லட்சம். சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அள்ளப்பட்ட கனிமவளம் குறித்தும் ஆய்வு நடக்கிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in