மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர், தூத்துக்குடியில் - கடற்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு :

மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பலரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். (அடுத்த படம்) தென்காசியில் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பலரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். (அடுத்த படம்) தென்காசியில் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்.
Updated on
1 min read

மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் உள்ளிட்ட கடற்கரைகளில் நேற்று பலரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும், தை அமாவாசை,ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம்வரக்கூடிய மகாளய அமாவாசைஆகியவை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இந்த நாட்களில் கடற்கரை, ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் தங்கள்முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுத்து வழிபடுவதை இந்துக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி துறைமுக கடற்கரை, தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை,தொடர்ந்து மற்ற கால பூஜைகள்நடைபெற்றன. மகாளய அமாவாசையை முன்னிட்டு கோயில் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர், கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி

தென்காசி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in