டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் :

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் :
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் துளசிதாஸ் என்ற டாஸ்மாக் பணியாளர் கொலை செய்யப்பட்டு, விற்பனை பணத்தை பறித்துச் சென்றதை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைத்து டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.கொலை செய்யப்பட்ட துளசிதாஸ் குடும்பத்துக்கு நிவாரணமாக அரசு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 157 டாஸ்மாக் கடைகளை அடைத்து ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் அருகே தாமரைப்பாடியில் உள்ள டாஸ்மாக் குடோனை 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பழநியில் டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in