செவிலியர் மேம்பாட்டுசங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

செவிலியர் மேம்பாட்டுசங்கத்தினர் ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2015 -ம் ஆண்டு எம்ஆர்பி தேர்வாணையம் மூலம் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று பணிக்கு சேர்ந்துள்ள செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, கரூர் ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்டத் தலைவர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in