

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆதார் எண், குடும்ப அட்டை, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை மதிப்பெண் சான்று பெறும்போது பள்ளிக்கு எடுத்து வர வேண்டும்.
நேற்று (4-ம் தேதி) முதல் வரும் 18-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப் பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும் https://tnvelaivaaippu.gov.in/ என்கிற வேலைவாய்ப்பு இணையதளம் வழியாகவும் பதிவு செய்துக் கொள்ளலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.