என்எல்சியில் காந்தி ஜெயந்தி விழா :

நெய்வேலியில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராகேஷ்குமார் பேசினார்.
நெய்வேலியில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராகேஷ்குமார் பேசினார்.
Updated on
1 min read

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

என்எல்சி இந்தியா நிறுவன நகர நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் சிலைக்கு நிறுவனத்தலைவர் ராகேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிறுவனஇயக்குநர்கள் விக்ரமன், ஷாஜி ஜான், ஜெய்குமார்சீனிவாசன், கண்காணிப்புதுறை தலைமை அதிகாரி சந்திரசேகர், உயர்அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து காந்தி யடிகளுக்கு மிகவும் பிடித்தமான ராம்தன் கீதம் இசைக்கப்பட்டது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூன்று சுரங்கங்கள் மற்றும் நகரிய பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் நட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in