தடுப்பூசி செலுத்தினால்தான் மது விற்பனை : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு :

தடுப்பூசி செலுத்தினால்தான் மது விற்பனை : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் இன்று சுமார் 900-க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, 70 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.மேலும் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது அது தொடர்பான மொபைல்போன் குறுஞ்செய்தியை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்களிடம் காண்பித்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும்.

தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யாமல் தனி நபருக்கு மதுபானம் விற்றது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in