மாநகர ஆணையர் திடீர் ஆய்வு :

மாநகர ஆணையர் திடீர் ஆய்வு :
Updated on
1 min read

திருச்சி கன்டோன்மென்ட்டில் உள்ள மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மாநகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களின் எண்ணிக்கை, அவற்றின் செயல்பாடுகள், கேமரா காட்சிப் பதிவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் முருகவேலிடம் ஆணையர் கார்த்திகேயன் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, மாநகர துணை ஆணையர்கள் சக்திவேல், முத்தரசு மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in