கோயில்களில் நாளை வழிபாடு நடத்த தடை :

கோயில்களில் நாளை வழிபாடு நடத்த தடை :
Updated on
1 min read

கரோனா விதிகள் அமலில் இருப்பதால் 3-ம் சனிக்கிழமை முன்னிட்டு கோயில்களில் வழிபாடு நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மத வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புரட்டாசி 3-ம் சனிக்கிழமை என பெரும்பாலான பக்தர்கள் கோயில் களுக்கு சென்றால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப் புள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை 3-ம் சனிக்கிழமையன்று கோயில் களில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in