கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் - நிதி ஆணைய இணை செயலாளர் ஆய்வு :

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்த நிதி ஆணைய இணை செயலாளர் ரேவதி.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்த நிதி ஆணைய இணை செயலாளர் ரேவதி.
Updated on
1 min read

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 6-வது மாநில நிதி ஆணைய இணை செயலாளர் வி.ரேவதி நேற்று ஆய்வு செய்தார்.

தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது விவாதம், பணியாளர்கள் விவரம், கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பாடு, ஊராட்சி ஒன்றியத்தின் வரவு, செலவு திட்டம் குறித்து இணை செயலாளர் வி.ரேவதி நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர், ஊராட்சி ஒன்றியத்தில்கட்டமைப்பு வசதிகள், பணியாளர்கள் விவரம்,வரவு, செலவு திட்ட பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், அடுத்த நிதியாண்டு வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஆதாரம் தேவை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து.சோமாசிப்பாடி ஊராட்சியில் ஆய்வு செய்த இணை செயலாளர் வி.ரேவதி, “ஊராட்சி மன்றத்தில் வரவு, செலவு திட்ட பதிவேடுகள் சரியாக பராமரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளாட்சி பிரதிநிகள் செய்து தர வேண்டும்“ என ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது ஊராட்சிகள் உதவி இயக்குநர் டி.கே.லட்சுமி நரசிம்மன், மாநில நிதி ஆணைய இணை இயக்குநர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in