சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த - பாட்டி உட்பட 2 பேர் கைது :

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த -  பாட்டி உட்பட 2 பேர் கைது :
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டான்துளசி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (31). இவருக்கு, லத்தேரியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை உறவினர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர்.

இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்ட சிறுமி தகவல் அளித்தார். அதன்பேரில், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் லத்தேரி காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

பிறகு, சிறுமியை கட்டாயப் படுத்தி திருமணம் செய்த பெருமாள், அதற்கு உடந்தையாக இருந்த பாட்டி குமாரி(62) ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in