பணம் கேட்டு மிரட்டியவர் கொலை - மதுபானக்கூட உரிமையாளர் : உட்பட 4 பேர் கைது :

பணம் கேட்டு மிரட்டியவர் கொலை -  மதுபானக்கூட உரிமையாளர் : உட்பட 4 பேர் கைது :
Updated on
1 min read

மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டவரை அடித்துக் கொலை செய்த வழக்கில், 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பாபுராஜா (37). இவர், பெருமாநல்லூரில் உள்ள மதுபானக் கூடத்துக்கு சென்று ரூ.10 ஆயிரம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மதுபானக்கூட உரிமையாளர் உட்பட 5 பேர் தாக்கியதில் பாபுராஜா உயிரிழந்தார். பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து, 5 பேர் கொண்ட கும்பலை தேடிவந்தனர். இதுதொடர்பாக, மதுபானக்கூட உரிமையாளர் கண்ணப்பன் (45), மதுபானக் கூடத்தில் பணியாற்றிய அதே பகுதியைச் சேர்ந்த உதயசந்துரு (18), சின்னக்கண்ணு மகன் முனியசாமி (29), ராமச்சந்திரன் (49) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் ரஞ்சித் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபின், பாபுராஜாவின் சடலம் ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருப்பூர் வாஷிங்டன் நகருக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, திருப்பூர்- பெருமாநல்லூர் சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தைக்குப் பின் அனைவரும் கலைந்துசென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in