கிருஷ்ணகிரியில் வரும் 2-ல் - மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி :

கிருஷ்ணகிரியில் வரும் 2-ல் -  மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகாத்மாகாந்தி பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி வரும் அக். 2-ம் தேதி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்டத்தில் மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிவரும் அக். 2-ம் தேதி காலையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பிற்பகலிலும் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடத்தப்பட உள்ளன.

இதில், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றிபெறுவோருக்கு வழங்கப்படும் 3 பரிசுகளோடு போட்டியில் பங்கேற்ற மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவரைத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசுத் தொகையாக ரு.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in