டிஎஸ்பிக்கு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் :

டிஎஸ்பிக்கு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் :
Updated on
1 min read

2019-ல் ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு 80 கிலோ போதைப்பொருளை கடத்த முயன்றதாக 11 பேர் மீது அப்போதைய ராமநாதபுரம் போதைப்பொருள் கடத்தல் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி ரகுபதி வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கு புதுக்கோட்டை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் ஆஜராகாத டிஎஸ்பி ரகுபதிக்கு (தற்போது நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் பணிபுரிந்து வருகிறார்) பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி குருமூர்த்தி நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in