செஞ்சுருள் சங்கம் சார்பில்கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் :

செஞ்சுருள் சங்கம் சார்பில்கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் :
Updated on
1 min read

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து நடைபெற்ற இந்த முகாமை கல்லூரி முதல்வர் வளவன் தொடங்கி வைத்தார். ரத்த வங்கி மருத்துவர் வளர்மதி தலைமையில் செவிலியர்கள் 117 மாணவர்கள் மற்றும் 4 பேராசிரியர்கள் ஆகியோரிடமிருந்து ரத்த தானம் பெற்றனர். முகாமில் ஆய்வுத்துறை தலைவர் நடராஜன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். முகாமுக்கான ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் செய்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in