குடும்பத் தகராறில் குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிப்பு :

குடும்பத் தகராறில் குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிப்பு   :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் வரகுபாடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (35). இவரது மனைவி பிரியங்கா (25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

குடும்ப பிரச்சினை காரணமாக பிரியங்கா நேற்று வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தன் மீதும், தனது 6 மாதக் குழந்தைமீதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in