பாலாற்றில் மூழ்கி உயிரிழந்த - 2 சகோதரர்களின் உடல்கள் மீட்பு :

வேலூர் தண்டலம் கிருஷ்ணாபுரம் பகுதி பாலாற்றில் நேற்று முன்தினம் குளிக்க சென்று தண்ணீரில் முழ்கி உயிரிழந்த சகோதரர்கள் உடலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று மீட்டனர்.  படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் தண்டலம் கிருஷ்ணாபுரம் பகுதி பாலாற்றில் நேற்று முன்தினம் குளிக்க சென்று தண்ணீரில் முழ்கி உயிரிழந்த சகோதரர்கள் உடலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று மீட்டனர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத னால், பாலாற்றுப் பகுதியில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண் டாம் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரித் துள்ளார்.

இதற்கிடையில், வேலூர் விருதம்பட்டு காளியம்மன் தோப்பு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முபாரக் (18), ஜாகீர் (17) ஆகியோர் நேற்று முன்தினம்நண்பர்களுடன் பாலாற்றில் குளித்துக் கொண் டிருந்தனர்.

அப்போது, சகோதரர்கள் இருவரும் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வேலூர் தீயணைப்பு வீரர்கள் தேடியும் உடல்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இருவரின் உடல்களையும் தேடும் பணியில் நேற்று காலை ஈடுபட்டனர். இருவரின் உடல்களும் நேற்று மாலை மீட்கப்பட்டது. இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக இருவரின் உடல்களையும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடக்கு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in