மின் ஊழியரை கைது செய்யக்கோரி - கே.வி.குப்பம் அருகே சாலை மறியல் :

மின் ஊழியரை கைது செய்யக்கோரி -  கே.வி.குப்பம் அருகே சாலை மறியல் :
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சென்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரை, பி.கே.புரம் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஜெயராஜ் என்பவர் தனது வேலைக்கு மாற்றாக வைத்திருந்தார். இந்நிலையில் கதிர்வேல் மின்சாரம் தாக்கி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இந்நிலையில், கதிர்வேல் உயிரிழப்புக்கு காரணமான ஜெயராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரி அவரது உறவினர்கள் பி.கே.புரம் மின் வாரிய அலுவலகம் அருகே கதிர்வேல் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த தகலறிந்த குடியாத்தம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி மற்றும் கே.வி.குப்பம் வட்டாட்சியர் சரண்யா ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தப் பிரச்சினை குறித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உறுதியளித்தை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in