எடப்பாடி அருகே குடும்ப தகராறில் - கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது :

எடப்பாடி அருகே குடும்ப தகராறில் -  கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது :
Updated on
1 min read

எடப்பாடி அருகே குடும்ப தகராறில் கணவரை கத்தியால் குத்திய மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

எடப்பாடி அடுத்த ஆவணிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (27), தறித்தொழிலாளியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரிஸ் நகரைச் சேர்ந்த நடனக் கலைஞர்களுக்கு ஒப்பனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இலக்கியா (24) என்பவரை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்தார். இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளார்.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், பெற்றோர் வீட்டில் இருந்த இலக்கியாவை சமாதானம் செய்து சில தினங்களுக்கு முன்னர் பாலமுருகன் எடப்பாடிக்கு அழைத்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரம் அடைந்த் இலக்கியா கத்தியால் பாலமுருகனை குத்தினார். இதை தடுக்க வந்த மாமியார் ஜோதிக்கு கையில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த பாலமுருகன் சேலம் அரசு மருத்துவ மனையிலும், ஜோதி எடப்பாடி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இலக்கியாவை கைது செய்தனர். மேலும், குடிபோதையில் தன்னை தாக்கியதாக இலக்கியா கொடுத்த புகாரின்பேரில், பாலமுருகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in