ஆரணி அருகே விபத்தில் - புதுச்சேரி கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு : மேலும் 3 வீரர்கள் உட்பட 4 பேர் காயம்

ஆரணி அருகே விபத்தில் -  புதுச்சேரி கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு :  மேலும் 3 வீரர்கள் உட்பட 4 பேர் காயம்
Updated on
1 min read

ஆரணி அருகே புளியமரத்தின் மீது கார் மோதிய விபத்தில் புதுச்சேரி கிரிக்கெட் வீரர் உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூ ருவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரியில் செயல்படும் தனியார் கிரிக்கெட் அகாடமியைச் சேர்ந்த 14 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றதும், அவர்களில் 4 வீரர்கள், புதுச்சேரிக்கு நேற்று முன் தினம் இரவு காரில் புறப்பட்டுள்ளனர். காரை, புதுச்சேரி, நெல்லித்தோப்பைச் சேர்ந்த ஓட்டுநர் உதயகுமார் (39) என்பவர் ஓட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அரியப்பாடி என்ற இடத்தில் நேற்று அதிகாலைவந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை யோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், காரின் முன் இருக்கையில் அமர்ந்து பயணித்த, சென்னை அம்பத்தூர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் மகன் மனோஜ்குமார்(14) என்பவர்சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உதயகுமார் மற்றும் சக வீரர்கள் லத்திகாசரண், யஸ்வந்த், சந்தோஷ் ஆகிய4 பேர் படுகாயமடைந்தனர். இதைய டுத்து, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓட்டுநர்உதயகுமாரும், செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் மருத்துவம னையில் யஸ்வந்த் உள்ளிட்ட 3 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

அவர்களது முதற்கட்ட விசாரணையில், உறங்கியநிலையில் காரை ஓட்டுநர் இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in