பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டம் :

பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டம் :
Updated on
1 min read

அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை தினமும் உறுதிசெய்ய வேண் டும். அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆதார் எண் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்களையும் இணையத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். கரோனா தடுப்பு வழிமுறைகளை பள்ளியில் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in