காட்பாடியில் நாளை மறுதினம் மின் நிறுத்தம் :

காட்பாடியில் நாளை மறுதினம் மின் நிறுத்தம் :
Updated on
1 min read

காட்பாடி பகுதியில் வரும் 28-ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘காட்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் வரும் 28-ம் தேதி (நாளை மறுதினம்) மேற்கொள்ளப் பட உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காந்திநகர், செங்குட்டை,காட்பாடி, கல்புதூர், காங்கேயநல்லூர், வண்டறந்தாங்கல், கழிஞ்சூர், சேனூர், வஞ்சூர், கிறிஸ்டியான்பேட்டை, காட்பாடி, பள்ளிகுப்பம், கன்சாலூர், வடுகன்குட்டை, எல்.ஜி.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in